Published : 01 Oct 2021 03:17 AM
Last Updated : 01 Oct 2021 03:17 AM
மேகாலயா மாநில தலைமைச் செயலாளராக அந்த மண்ணின் புதல்வி ரெபேக்கா வனிஷா சூசியாங் பதவியேற்றுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் தலைமைச் செயலாளராக எம்.எஸ்.ராவ் பதவி வகித்து வந்தார். அவர் நேற்று ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக ரெபேக்கா வனிஷா சூசியாங் பதவியேற்றுக் கொண்டார்.
அவர் மேகாலயாவின் பூர்வகுடியான காஸி இனத்தைச் சேர்ந்தவர். மாநில மக்கள் தொகையில் 48 சதவீதம் பேர் காஸி இன மக்கள் ஆவர். இவர்கள் காஸி மொழி பேசுகின்றனர். 85 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள்.
மேகாலயாவின் புதிய தலைமைச் செயலாளர் ரெபேக்கா வனிஷா சூசியாங் 1989-ம் ஆண்டு அணியை சேர்ந்தவர். மாநிலத்தின் 2-வது பெண் தலைமைச் செயலாளர் ஆவார். அவர் கூறும்போது, "நாட்டில் பெண் தலைமைச்செயலாளர்களின் எண்ணிக்கை குறைவு. மாநிலத்தின் உயர் பதவியை ஏற்றுள்ளேன். எனதுவாழ்க்கை மேகாலயா இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன். உண்மையின் வழியில் நடப்பேன்"என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT