Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா நேற்றுமுன்தினம் கூறியதாவது:
அசாமின் தராங் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வேற்று நாட்டவர் குடியேறுவதற்கு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பினர் உதவி வருகின்றனர். அவர்களை அகற்ற முயன்ற போது அதற்குத் தடையாக பிஎப்ஐ அமைப்பினர் நிற்கின்றனர்.
அரசு நிலத்தை மீட்பதற்காக சென்ற போது தாக்குதல் நடத்த தூண்டி விடுகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தராங் மாவட்டம் தோல்பூருக்கு பிஎப்ஐ உறுப்பினர்கள் சென்றுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உணவு தருகிறோம் என்ற பெயரில் அங்கு சென்று கலவரத்தைத் தூண்டுவதற்கு முயற்சி செய் துள்ளனர். இதனால்தான் அங்கு பிரச்சினை ஏற்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். பிஎப்ஐ அமைப்பை தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பிஎப்ஐ நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இடைத் தேர்தல் வருவதால் இந்த சம்பவத்துக்கு மத சாயம் பூச முதல்வர் ஹிமந்தா முயற்சிக்கிறார் என்று நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT