Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM
மத்திய அமைச்சர்கள் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன், அசாமை சேர்ந்த சர்வானந்த சோனேவால் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக் களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2-வது முறையாக அமைந்தது. எனினும், மத்திய அமைச்சரவையில் எந்த மாற்ற மும் செய்யப்படவில்லை.
இதனிடையே, மத்திய அமைச்சர்களாக பொறுப்பு வகித்த ராம்விலாஸ் பாஸ்வான், சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் மறைந்ததால், அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளை மற்ற அமைச்சர்கள் கூடுதலாக கவனித்து வந்தனர். இதனால் அமைச்சரவையை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், அசாம் முன்னாள் முதல்வர் சர்வானந்தா சோனேவால், ஜோதிராதித்ய சிந்தியா உட்பட 43 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. எல். முருகனுக்கு மத்திய ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாக மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட எல். முருகன் உள்ளிட்ட சிலர் எம்.பி. பதவியில் இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக தேர்வாக வேண்டியது அவசியம். அதன்படி, மத்தியஅமைச்சர்கள் எல்.முருகன், சர்வானந்தா சோனேவால் முதல் கட்டமாக மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவார்கள் என அண்மைக்காலமாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால், அவர்கள் எந்த மாநிலத்தில் போட்டியிடுவார்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
இந்த சூழலில், மத்திய பிரதேச மாநிலங்களவைத் தேர் தலில் எல். முருகனும், அசாம் மாநிலங்களவைத் தேர்தலில் சர்வானந்தா சோனாவலும் போட்டியிடுவார்கள் என பாஜக நேற்றுஅதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேற்குறிப்பிட்ட இரு மாநிலங் களிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் உள்ளது. எனவே, எல்.முருகனும், சர்வானந்தா சோனாவலும் மாநிலங் களவைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT