Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM
அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சி கிடையாது. மகிழ்ச்சியான அர சியல்வாதியை கண்டுபிடிப்பது அரிது என்று மத்திய தரைவழிபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நாடாளுமன்ற அமைப்புமுறை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றிய கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நகைச் சுவையாக கருத்துக்களை தெரி வித்தார். அவர் பேசியதாவது:
நான் பாஜக தலைவராக இருந்தபோது, சோகமாக இல்லாத யாரையும் நான் காணவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் ஒருமுறை என்னிடம் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று கேட்டார், எதிர்காலத்தைப் பற்றி கவலைப் படாதவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் பதிலளித்தேன்.
அமைச்சராக முடியாததால் எம்எல்ஏக்கள் அதிருப்திஅடைகின்றனர். அமைச்சரானா லும் நல்ல துறை கிடைக்காவிட்டால் அதிருப்தி ஏற்படுகிறது. நல்ல துறை கிடைத்தவர்கள் முதல்வராக முடியவில்லையே என்று மகிழ்ச்சி இல்லாமல் உள்ளனர்.
முதல்வராக இருப்பவர்கள் எவ்வளவு காலத்துக்கு இந்தபதவியில் நீடிப்போம் என்று மகிழ்ச்சி இல்லாமல் பாதுகாப்பற்ற உணர்வுடன் உள்ளனர். அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சி கிடையாது.
சமூக சேவை அவசியம்
மகிழ்ச்சியான அரசியல்வாதியை கண்டுபிடிப்பது மிகவும்அரிது. சமூக சேவையே அரசியலின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களின் வாழ்விலும் சமூக பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவரும் கருவியாக அரசியல் இருக்க வேண்டும்.
இவ்வாறு நிதின் கட்கரி பேசினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT