Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை: உச்ச நீதிமன்றம் கருத்து

வீட்டுக்கு வீடு சென்று கரோனா தடுப்பூசி செலுத்த கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “நாட்டின் மாறுபட்ட கரோனா சூழ்நிலைகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை கருத்தில் கொண்டால், வீட்டுக்கு வீடு சென்று கரோனா தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை. குறிப்பாக தடுப்பூசி பணிகளில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் ஏற்பட்டு வரும் சூழலில் அத்தகைய உத்தரவு தேவையில்லை” என்றுகூறி மனுவை தள்ளுபடி செய்தனர். ஒவ்வொரு கரோனா மரணத்தையும் மருத்துவ அலட்சிய மாகக் கருதி குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரிய மற்றொரு பொதுநல மனுவும் இதே அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “கரோனா பாதிப்பால் ஏற்பட்ட அனைத்து உயிரிழப்பையும் மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்டதாக கருத முடியாது’’ என்று கூறி இந்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x