Published : 15 Feb 2016 05:35 PM
Last Updated : 15 Feb 2016 05:35 PM
பெங்களூருவில் சில நாட்களுக்கு முன்னர் தனியார் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து பின்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சிறுத்தை பன்னர்கட்டா வனவிலங்கு பூங்காவிலிருந்து தப்பியது.
இது குறித்து வனத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சிறுத்தை இரவு நேரத்தில் தப்பியிருக்கலாம். காலையில்தான் அது தப்பிச் சென்றது தெரிய வந்தது. சிறுத்தையை தேடும் பணி நடந்து வருகிறது. கூண்டில் இருந்து சிறுத்தை தப்பியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
சிறுத்தை கூண்டை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருந்ததிருந்தால் சிறுத்தை தானாக தப்பிக்க வாய்ப்பில்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சிறுத்தை தப்பியது தொடர்பாக வனத்துறையிடம் விளக்க அறிக்கை கேட்கவுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT