Published : 24 Feb 2016 06:12 PM
Last Updated : 24 Feb 2016 06:12 PM
அரசு என்னைப் பார்த்து பயப்படுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில ஐவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசவிடாமல் தடுக்க முயற்சி செய்யும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறும்போது, “நான் பேசுவேன். ஆனால், அரசு என்னைப் பார்த்து பயப்படுவதால், என்னைப் பேச விடமாட்டார்கள். நாடாளுமன்றத்தில் ஜேஎன்யு விவகாரம் குறித்து என்ன பேசுவேனோ என அஞ்சுவதால் பேச விடமாட்டார்கள்” என்றார்.
ஜேஎன்யு விவகாரத்தில் மாணவர்களுக்கு ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “எவ்வித தயக்கமும் இல்லாமல் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஒவ்வரு உறுப்பினருக்கும் எந்தவொரு பிரச்சினை குறித்து பேசவும் அனுமதி உண்டு. ஆனால், அதைப்பற்றி வெளிய விவாதிக்க வேண்டிய தேவை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, “நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் அரசு உரிய பதில் அளிக்கும். விவாதத்துக்கு தயாராகவே உள்ளோம்” என்றார்.
மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “இது கருத்துரிமை, பேச்சுரிமை விவகாரம். யார் தேச விரோதமாக பேசுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பது போலீஸின் பணி ஆனால், அதற்காக அனைத்து ஜேஎன்யு மாணவர்களும் தீவிரவாதிகள், தேச விரோதிகள் என்று பொருளல்ல” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT