Published : 23 Feb 2016 09:12 AM
Last Updated : 23 Feb 2016 09:12 AM
பிஹார் மாநிலத்தில் போலீஸ் நாய் குலாபோ விபத்தில் பலியானதைத் தொடர்ந்து 5 போலீஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் நாய் படையில், குலாபோவுக்கு சார் ஆய்வாளர் பதவி அளிக்கப்பட்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்பு ரோஹ்டால் மாவட்டத்தில் குலாபோ சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த ஒரு லாரி மோதி குலாபோ உயிரிழந்தது.
குலாபோவின் கழுத்தில் சங்கிலியை மாட்டாமல், சுதந்திர மாக உலவ விட்டதால் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, குலாபோவை கையாள்பவர்கள் 4 பேர் மற்றும் சார் ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) ஆகிய 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT