Last Updated : 04 Feb, 2016 08:04 PM

 

Published : 04 Feb 2016 08:04 PM
Last Updated : 04 Feb 2016 08:04 PM

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சம்மன்: உச்ச நீதிமன்றத்தில் சோனியா, ராகுல் மனு

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் விசாரணை நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேட்டடு ஜர்னல்ஸ் (ஏஜெஎல்) நிறுவனம் நடத்தி வந்தது. பின்னர் இந்த நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. இதில் சோனியா, ராகுலுக்கு தலா 38 சதவீத பங்குகள் உள்ளன.

இந்நிலையில், ஏஜெஎல் சொத்துகளை யங் இந்தியா கையகப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி யங் இந்தியா நிறுவன பங்குதாரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த சம்மனை எதிர்த்து சோனியா, ராகுல் உள்ளிட்ட அனைவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களது மனுக்களை கடந்த டிசம்பர் 7-ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சோனியாவும் ராகுல் காந்தியும் உச்ச நீதிமன்றத்தில் இன்று (வியாழன்) மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். மேலும், சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x