Published : 12 Feb 2016 09:15 AM
Last Updated : 12 Feb 2016 09:15 AM

ஹைதராபாத்தில் 1 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்

ஹைதராபாத் நகரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து சீரமைப்புக்காக அடுத்த ஆண்டுக் குள் ஒரு லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என நகர போலீஸ் ஆணையர் மஹீந்தர் ரெட்டி தெரிவித்தார்.

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை நகர போலீஸ் ஆணையர் மஹீந்தர் ரெட்டி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: ஹைதராபாத் நகரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து சீரமைப்புக்காக இதுவரை 15 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவி செய்து வருகின்றனர். இதே போன்று அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஹைதராபாத் நகரம் முழுவதும் ஒரு லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x