Last Updated : 05 Feb, 2016 11:12 AM

 

Published : 05 Feb 2016 11:12 AM
Last Updated : 05 Feb 2016 11:12 AM

பிரியங்காவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் 50 லட்சமாக உயர்வு

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பின் தொடர் வோர் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளது.

இஸ்டாகிராமில் பிரியங்கா தனது புகைப்படத்துடன் கூடிய குறிப்பில், “நமது குடும்பம் வளர்ந்து வருகிறது. உங்கள் அன்பு என்னை திணறச் செய்கிறது. இஸ்டாகிராமில் 50 லட்சம் பேரின் அன்புக்கு மிகவும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

33 வயதான பிரியங்கா, கடந்த 2000-ம் ஆண்டில் உலக அழகி பட்டம் பெற்றார். 2002-ல் நடிகர் விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப் படம் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டில் ‘தி ஹீரோ’, ‘லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை’ படங்கள் மூலம் இந்தியில் அறிமுகமானார்.இந்தி யில் முன்னணி நடிகைகளில் ஒருவ ராக விளங்குகிறார் பிரியங்கா.

அமெரிக்காவின் த்ரில்லர் டி.வி. தொடரான ‘குவான்டிகோ’ மூலம் சர்வதேச புகழும் பெற்றார். இத்தொடரில் சிறந்த நடிப்புக்காக கடந்த மாதம் ‘People’s Choice’ விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தெற்காசிய நடிகை என்ற பெருமையை பிரியங்கா பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x