Published : 05 Feb 2016 11:04 AM
Last Updated : 05 Feb 2016 11:04 AM
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி யுக் சந்தக் என்ற 8 வயது பள்ளி மாணவர் கடத்திச் செல்லப்பட்டு, கொல்லப் பட்டார். மறுநாள் தொலைதூரப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் உடலில் 26 காயங்கள் இருந்தன.
இக்கொலை தொடர்பாக நாக்பூர் தனியார் கல்லூரி பி.காம். மாணவர்கள் ராஜேஷ் தாவரே (19), அரவிந்த் சிங் (23) மற்றும் இவர்களில் ஒருவரின் தம்பியான 17 வயது இளம் குற்றவாளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்ற முதன்மை நீதிபதி கே.கிஷோர் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் கல்லூரி மாணவர்கள் இருவருக்கும் அவர் மரண தண்டனை வழங்கினார்.
இவ்வழக்கில் இளம் குற்றவாளி மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT