Published : 12 Feb 2016 09:12 AM
Last Updated : 12 Feb 2016 09:12 AM
பிரபல இயக்குநர் ராஜமவுலிக்கு ஹைதராபாத் நாம்பல்லி நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் வழங்கியது.
ஹைதராபாத் எம்.எல்.ஏ காலனி அருகே உள்ள போட்டோ கிராஃபர்ஸ் காலனியில் தனக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புவனேஷ்வர் என்பவர் கடந்த 2011- ம் ஆண்டு நாம்பல்லி நீதிமன்றத்தில் ராஜமவுலிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இயக்குநர் ராஜமவுலி இதுவரை ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நேற்று விசாரணை நடத்திய நீதிமன்றம், வரும் 24-ம் தேதி ராஜமவுலி கட்டாயமாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டுமென நோட்டீஸ் வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT