Published : 12 Feb 2016 09:12 AM
Last Updated : 12 Feb 2016 09:12 AM

ராஜமவுலிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பிரபல இயக்குநர் ராஜமவுலிக்கு ஹைதராபாத் நாம்பல்லி நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் வழங்கியது.

ஹைதராபாத் எம்.எல்.ஏ காலனி அருகே உள்ள போட்டோ கிராஃபர்ஸ் காலனியில் தனக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புவனேஷ்வர் என்பவர் கடந்த 2011- ம் ஆண்டு நாம்பல்லி நீதிமன்றத்தில் ராஜமவுலிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இயக்குநர் ராஜமவுலி இதுவரை ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நேற்று விசாரணை நடத்திய நீதிமன்றம், வரும் 24-ம் தேதி ராஜமவுலி கட்டாயமாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டுமென நோட்டீஸ் வழங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x