Published : 11 Jul 2021 03:17 PM
Last Updated : 11 Jul 2021 03:17 PM

மக்களின் பத்ம விருது ; பிரபலம் அடையாதவர்கள் பெயர்களை பரிந்துரைக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

மக்களின் பத்ம விருதுக்கு எழுச்சியூட்டும் நபர்களை பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி வரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளித்து பெரிதும் பிரபலம் அடையாதவர்களை மக்களின் பத்ம விருதுக்கு பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “அடிமட்ட அளவில் தன்னிகரற்ற பணியில் ஈடுபடும் ஏராளமான திறமைவாய்ந்த மக்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டதோ அல்லது கண்டதோ இல்லை.

இதுபோன்ற எழுச்சியூட்டும் மக்களை நீங்கள் அறிவீர்களா? மக்களின் பத்ம விருதுக்கு (#PeoplesPadma) அவர்களை நீங்கள் பரிந்துரைக்கலாம். செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும். padmaawards.gov.in”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x