Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

காங்கிரஸ் ‘டூல் கிட்’ வழக்கில் என்ஐஏ விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

காங்கிரஸ் டூல்கிட் வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

கரோனா பாதிப்பைப் பயன்படுத்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழைக் கெடுக்கக் காங்கிரஸ் தனியாகவே ட்விட்டரில் ஒரு டூல்கிட்டை உருவாக்கி உள்ளதாக பாஜக செய்தித்தொடர்பாளர் சாம்பிட் பத்ரா, கடந்த மே மாதம் குற்றம்சாட்டினார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் டூல் கிட் வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.எஸ். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதி சந்திரசூட் கூறும்போது, “இதுபோன்ற அற்பமான காரணங்களைக் கூறி வரும் மனுக்களை ஏற்க முடியாது. இதுபோன்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு இதுவே சரியான நேரம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதை நீங்கள் அறிவீர்களா?. இந்த மனுவை விசாரிக்க இயலாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x