Published : 08 Feb 2016 11:27 AM
Last Updated : 08 Feb 2016 11:27 AM

பெங்களூருவில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த சிறுத்தை தாக்கி 6 பேர் காயம்

பெங்களூருவில் குண்டனஹல்லியில் தனியார் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த சிறுத்தை தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர்.

பள்ளி வளாகத்துக்கு அருகில் இருக்கும் வனப்பகுதி வழியாக அந்த சிறுத்தை வந்திருக்கலாம் எனக் கூறப்ப்டுகிறது. பள்ளிக்கூடம் விடுமுறை நாள் என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை.

பள்ளி வளாகத்தில் சிறுத்தை சுற்றித் திரிவதை சிசிடிவி கேமராவில் பார்த்த காவலாளிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் இரண்டு குழுக்கள் அமைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடியும் சிறுத்தை அங்குமிங்கும் தப்பியோடியது.

பின்னர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் 6 பேர் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x