Published : 02 Jul 2021 03:12 AM
Last Updated : 02 Jul 2021 03:12 AM

மேற்கு வங்கத்தில் உயர் கல்வி பயில ரூ.10 லட்சம் கடன்

கொல்கத்தா

மாணவர்கள் உயர் கல்வி பயில வசதியாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறும் திட்டத்தை மேற்கு வங்க மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த கடன் திட்டத்தின் மூலம்இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் மேற்படிப்பு பயிலலாம். இதற்கான வட்டி 4 சதவீதம் ஆகும்.இந்தக் கடனை எளிய தவணையில் திருப்பிச் செலுத்தலாம். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இதை தெரிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 20 லட்சம்மாணவர்கள் பயன் பெறுவர். இதனால் தங்கள் மகன், மகளைஉயர்கல்வி பயில வைக்க சொத்துகளை விற்பனை செய்யும் அவசியம் ஏற்படாது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இளங்கலை, முதுகலை, தொழில்கல்வி, டிப்ளமோ, பிஹெச்டி உள்ளிட்ட படிப்புகளைத் தொடர இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இந்தக் கடன் தொகை பெற எவ்வித உத்திரவாதமும் அளிக்கத் தேவையில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x