Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

கரோனா மருந்து தயாரிப்புக்கு அரசின் ஒத்துழைப்பு இல்லை: நாட்டு மருத்துவர் ஆனந்தையா ஆதங்கம்

ஆந்திர மாநிலம், கிருஷ்ணப் பட்டினத்தில் வசிக்கும் நாட்டு மருத்துவர் ஆனந்தையா, கரோனா வைரஸ் தொற்றுக்கு 3 வகையான மருந்தும் கண்களில் விடும் சொட்டு மருந்தும் மக்க ளுக்கு வழங்கி வந்தார். மருந்து வாங்க மக்கள் கூட்டமாக கூடிய தால் அரசு தடை விதித்தது.

இதுகுறித்து சர்ச்சை எழுந்ததால், ஆனந்தையா மருந்துகளுக்கு உயர் நீதிமன்றம், ஆயுஷ் அமைப்பு அனுமதி வழங்கின. இந்நிலையில் அவரது மருந் துகள், கிருஷ்ணப்பட்டினத்தை உள்ளடக்கிய சர்வேபள்ளி சட்டப் பேரவை தொகுதி மக்களுக்கு விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

இந்நிலையில் ஆனந்தையா நேற்று கூறும்போது, “மக் களுக்கு இலவசமாக கரோனா மருந்து வழங்கலாம் என தீர்மானித்து பணிகளை தொடர்ந்தால், ஆந்திர அரசு போதிய ஒத்துழைப்பு வழங்க வில்லை. மூலிகைப் பொருட்களை போதிய அளவு வழங்க எந்த அதிகாரியும் முன்வரவில்லை. கிருஷ்ணப்பட்டினத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்கிறது.

இதனால் மூலிகை மருந்தை அதிக அளவு தயாரிக்க முடிய வில்லை. தரமான மின்சாரம் வழங்கினால் மட்டுமே மருந்தை அதிகமாக தயாரிக்க முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x