Published : 18 Dec 2015 10:55 AM
Last Updated : 18 Dec 2015 10:55 AM

மற்றொரு அல்-காய்தா தீவிரவாதி கைது

உத்தரப்பிரேத மாநிலம், சம்பல் மாவட்டத்தில் அல்-காய்தா தீவிர வாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஜாபர் மசூத் என்ற இந்த நபரை, மேற்கு உ.பி.யில் பல்வேறு இடங் களில் நடந்த தேடுதல் வேட்டைக்குப் பின் போலீஸார் கைது செய்தனர்.

அல்-காய்தா அமைப்புடன் தொடர்புள்ளதாக சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது ஆசிப் (41), மதரஸா ஆசிரியரான அப்துல் ரஹ்மான் (37) ஆகிய இருவரை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். இந்நிலை யில் மூன்றாவது நபராக ஜாபர் மசூத் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகம்மது ஆசிப்பை வரும் 28-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலை யில் அப்துல் ரஹ்மான், ஜாபர் மசூத் ஆகிய இருவரும் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டனர். இவர்களை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

உ.பி.யில் மதரஸா நடத்தி வரும் அப்துல் ரஹ்மான், இங்கு பயிலும் மாணவர்களை தீவிரவாதப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x