Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

சீனாவிடமிருந்து 60 ஆயிரம் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள்: இந்திய நிறுவனங்கள் ஆர்டர்

புதுடெல்லி

இந்தியாவில் ஆக்சிஜன் மற்றும்ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய தனியார் நிறுவனங்கள் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட அளவில் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை சீன நிறுவனங்களிடமிருந்து வாங்க ஆர்டர்செய்துள்ளன.

ஆக்ஸி மீட்டர், ரெம்டெசிவிர், சிடி ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வாங்கவும் இந்திய நிறுவனங்கள் சீன நிறுவனங்களை தொடர்புகொண்டு வருகின்றன.

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தேவையான அளவில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு தேவையான உதவியை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், இந்திய அரசு இதுவரையில் கரோனா தொடர்பாக சீனாவிடமிருந்து அரசாங்க ரீதியான உதவி எதையும் பெறவில்லை. அதேசமயம், சீன தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறவும், இந்திய தனியார் நிறுவனங்கள் சீனாவிடமிருந்து மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்யவும் இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்திய நிறுவனங்கள் சீன நிறுவனங்களிட மிருந்து ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்களை அதிக அளவில் வாங்கி வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் சீனாவிடமிருந்து 5,000 வெண்டிலேட்டர்கள், 21,569 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், 2.1 கோடி முகக் கவசங்கள், 3000 டன் அளவில் மருந்துப் பொருட்களை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x