Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM
கரோனா தாக்கம் சிறைகளில் அதிகரிப்பதை தடுக்க, தகுதி வாய்ந்த கைதிகளை ஜாமீனில் விடுவிக்க மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது தினசரி கரோனா தொற்று 4 லட்சத்தையும் கடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தால் மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக, படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனிடையே, கரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர் பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
அந்த வகையில், சிறைகளில் கரோனா பரவுவதை தடுப்பது குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய அமர்வு நேற்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கரோனா தொற்றின் தாக்கத்தால் நாடே அபாயகரமான சூழலில் இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சிறைகளில் பெருந்தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். சிறைகளில் நெரிசலை தவிர்ப்பதே இதற்கு ஒரே வழி. எனவே ஜாமீன் மற்றும் பரோலில் செல்ல தகுதியுடைய சிறைக் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தகுதி வாய்ந்த சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நாடு முழுவதும் சிறைகளில் இருந்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர், ஜாமீன், பரோல் காலம் முடிவடைந்ததும் அவர்கள் சிறைக்கு திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT