Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM
கர்நாடகாவில் ஒரு வாரமாக தினமும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுவதால் மருத்துவமனைகளில் படுக்கை கள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்டவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா நேற்று கூறியதாவது:
நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்கீடு செய்யும் உதவி மையத்தை எப்போது தொடர்புகொண்டாலும் படுக்கைகள் கிடைப்பதில்லை. அதேவேளையில் ஆயிரக்கணக்கானோர் மருத்துவ மனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்கள். படுக்கைகள் காலியானாலும் அவைநோயாளிகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்தேன்.
அதில் நோயாளிகளின் ஆபத்தான நிலையை வைத்துரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு படுக்கை ஒதுக்கீடு செய்வது தெரிந்தது.
உதவி மையத்தை தொடர்பு கொள்பவரிடம் பகலில் படுக்கை இல்லை எனக் கூறி, இரவு 12 மணிக்கு படுக்கை ஒதுக்கி பணம் சம்பாதித்துள்ளனர். இதில் மாநகராட்சி அதிகாரிகள் சிலரும், தனியார் ஒப்பந்த நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. மருத்துவமனை படுக்கை ஒதுக்கும் விவகாரத்தில் நோயாளிகளின் மரணத்துடன் விளையாடிய நபர்கள் மீது முதல்வர் எடியூரப்பா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேஜஸ்வி சூர்யா கூறினார்.
இதையடுத்து முதல்வர் எடியூரப்பாவின் உத்தரவின்படி நேத்ராவதி (43), ரோகித் குமார் (35) உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
கள்ளச்சந்தையில் மருந்து
பெங்களூருவில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி அந்த மருந்தை கள்ளச்சந்தையில் ரூ. 60 ஆயிரம் வரை விற்ற ஜனார்த்தனன், தீபக், லோகேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT