Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

கர்நாடகாவில் கரோனாவை தடுக்க‌ குக்கர் மூலம் ஆவி பிடிக்கும் போலீஸார்

குக்கர் மூலம் ஆவி பிடிக்கும் போலீஸார்

பெங்களூரு

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ளது. தினசரி சுமார் 50 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கும் தொற்று ஏற்பட்டுள்ள‌தால் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பெங்களூரு போலீஸார் கரோனா வருவதை தடுக்கும் வகையில் காவல் நிலையங்களில் இரட்டை முக கவசம் அணிவது, கையுறை அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்கின்றனர்.

இந்நிலையில் சர்ஜாப்பூர், அல்சூர், சிவாஜிநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கரோனா வராமல் தடுக்க காவலர்கள் அனைவரும் காலையும் மாலையும் மூலிகை ஆவி பிடித்து வருகின்றனர்.

இதனால் போலீஸார் சமையல் குக்கரில் துளசி, வேப்பிலை, தைல இலை ஆகியவற்றை போட்டு விசில் உள்ள இடத்தில் இரட்டை குழாயை பொருத்தி மூலிகை ஆவி பிடிக்கின்றனர். இதனால் சுவாச பிரச்சினை சிறப்பாக பணியாற்றுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சர்ஜாப்பூர் போலீஸார் இவ்வாறு ஆவி பிடிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றதால், மாநிலம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களிலும் இதே பாணியை பின்பற்ற போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x