Published : 29 Dec 2015 10:18 AM
Last Updated : 29 Dec 2015 10:18 AM
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக கருத்து கூறிய அசாம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சரு மான நிலமணி சென்டேகா கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்பாரி நகர பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பிரதமர் நரேந்திர மோடியின் 2-வது மனைவி என்று கூறினார்.
அவரது பேச்சை கண்டித்து அசாம் மாநில பாஜகவினர் மாநிலம் முழுவதும் நேற்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக நல்பாரி மாவட்டம், கமல்பூர் போலீஸ் நிலையத்தில் நிலமணி சென்டேகாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்டேகா மீது நேற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT