Published : 01 May 2021 05:12 PM
Last Updated : 01 May 2021 05:12 PM

16.37 கோடி கோவிட் தடுப்பூசி; மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கியது

இதுவரை 16.37 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் இந்திய அரசின் ஐந்து அம்ச உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை‌ ஆகியவற்றுடன் தடுப்பூசி, மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் மூன்றாவது கட்டம் இன்று (2021, மே 1) முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்திய அரசு இதுவரை சுமார் 16.37 கோடி (16,37,62,300) தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் வீணானவை உட்பட மொத்தம் 15,58,48,782 டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

79 லட்சத்திற்கும் அதிகமான (79,13,518) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளன.

மேலும் சுமார் 17 லட்சம் டோஸ்கள்‌ (17,31,110), அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.

45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு இந்திய அரசின் மூலமாக இலவசமாக வழங்கப்பட உள்ள தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை குறித்த தகவல்களை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது.

இதன்படி மே மாதத்தின் முதல் 15 நாட்களில், தமிழகத்திற்கு 5,39,060 கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், 1,94,120 கோவேக்சின் தடுப்பூசிகளையும், புதுச்சேரிக்கு 29,890 கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x