Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட நண்பருக்காக 1,400 கி.மீ. தூரத்திலிருந்து ஆக்சிஜன் வாங்கி வந்த ஆசிரியர்

கரோனாவால் பாதிக்கப்பட்ட தனது நண்பருக்காக காரில் 1,400 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கி வந்துள்ளார் ஆசிரியர் ஒருவர்.

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவைச் சேர்ந்தவர் தேவேந்திரா (38). ஆசிரியரான இவர் பொகாரோ தொழிற்பேட்டையிலுள்ள செக்டார் - 4-ம் பிரிவில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது நண்பர் ரஞ்சன் அகர்வால் கரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்குமூச்சு விடுதலில் பிரச்சினையும் இருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஞ்சன் அகர்வால் ஐ.டி. ஊழியர்ஆவார். உத்தரபிரதேச மாநிலம்நொய்டாவில் வசித்து வருகிறார். நொய்டாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பிரச்சினை ஏற்பட்டது. அங்குள்ள டாக்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டரை வெளியிலிருந்து வாங்கி வருமாறு ரஞ்சன் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இந்த விவரத்தை ரஞ்சனின் பெற்றோரிடமிருந்து அறிந்ததும், தேவேந்திரா தனது காரில் ஆக்சிஜன் சிலிண்டர் தேடி புறப்பட்டார்.

அங்குள்ள ஜார்க்கண்ட் ஸ்டீல் ஆக்சிஜன் தொழிற்சாலையில் தனது நண்பரின் உதவியால் சிலிண்டர் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றிக் கொண்டு நொய்டாவுக்கு காரில் புறப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புறப்பட்ட அவர் தொடர்ச்சியாக காரை ஓட்டிக் கொண்டு நொய்டாவுக்கு வந்து சேர்ந்து, டாக்டர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டரை ஒப்படைத்தார். தற்போது ரஞ்சன் அகர்வால் உடல்நலம் தேறி வருகிறார்.இந்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x