Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை: ஹெலிகாப்டரில் அழைத்து வந்து கொண்டாடிய குடும்பம்

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி குழந்தையுடன் வரும் பெற்றோர்.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் நிம்டி சந்தாவட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனுமன் பிரஜாபத். இவரது மனைவி சுகி தேவி. நாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அண்மையில் சுகி தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் அவர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஹெலி காப்டரில் பெண் குழந்தையை அழைத்து வந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து பிரஜாபத் கூறியதாவது: எங்கள் இளவரசி எங்களுக்கு மிகவும் சிறப்புக் குரியவள். மனைவியின் சொந்த ஊரான ஹர்சோலவ்வில் இருந்து நிம்டி சந்தாவட்டாவுக்கு 40 கிலோ மீட்டர் தூரமுள்ளது. எனவே அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிராமத்துக்கு அழைத்து வர முடிவு செய்தோம். இதற்கு உரிய அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் பெற்று ஹெலிகாப்டரைக் கொண்டு வந்தோம்.

10 நிமிடத்தில் கிராமத்தை அடைந்தோம். கிராமத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட் டிருந்தது. அங்கு பத்திரமாக தரையிறங்கி கொண்டாட்டத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.

ஹெலிகாப்டரில் குழந்தையை அழைத்து வருவது, எனது தந்தை மதன்லால் கும்ஹாரின் திட்டமாகும். தனது பேத்தியை சிறப்பாக அழைத்து வர அவர் முடிவு செய்தார்.

குழந்தைக்கு ரியா என்று பெயர் வைத்துள்ளோம். குழந்தையில் ஆண், பெண் இரண்டும் ஒன்றே. என் குழந்தை என்ன படிக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அதைச் செய்வேன்.

இவ்வாறு பிரஜாபத் கூறினார்.

ஹெலிகாப்டர் அழைத்து வருதல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மேள தாளம் என மொத்தம் ரூ.4.5 லட்சத்தை செலவு செய்துள்ளார் ஹனுமன் பிரஜாபத். குழந்தையை ஹெலி காப்டரில் அழைத்து வந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x