Published : 11 Dec 2015 12:46 PM
Last Updated : 11 Dec 2015 12:46 PM

டெல்லியில் ஓடும் காரில் சிறுமி கூட்டு பலாத்காரம்

டெல்லியில் ஓடும் காரில் 14 வயது சிறுமி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை விவரித்த போலீஸார், "மேற்கு டெல்லியில் ரான்ஹோலா பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி 7-ம் வகுப்பு படிக்கிறார். பள்ளி முடிந்த பின்னர் அவர் ஒரு காரில் ஏறியுள்ளார். அந்த காரில் இருந்த இருவரை சிறுமிக்கு ஏற்கெனவே தெரியும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் செல்லும் வழியில் மேலும் 4 பேர் அதே காரில் ஏறியுள்ளனர். அவர்கள் சிறுமிக்கு முன்னர் அறிமுகமாகாதவர்கள். இந்நிலையில், கார் சென்று கொண்டிருக்கும் போதே அச்சிறுமியை 6 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவ்வழியாக சென்ற போலீஸ் ரோந்து வாகனம் ஒன்று அந்த காரை மடக்கிப் பிடித்தது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஐவரும் ரமேஷ், நரேந்திரா, ராகுல், சந்தீப், சூரஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒருவர் தப்பி ஓடினார். அவரைத் தேடி வருகிறோம்" என்றனர்.

ரான்ஹோலாவில் கடந்த அக்டோபர் மாதம் 2 வயது குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x