Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி கரோனா நோயாளி களுக்கு உதவும் வகையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள தனது சுத்திகரிப்பு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அளிக்க முன்வந்துள்ளார்.
இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தும் மகாராஷ்டிர மாநிலத்துக்கு இலவசமாக அளிக்கப்படும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையிலிருந்து 100 டன் ஆக்சிஜன் தங்கள் மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கு உட்்பட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இங்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ராணுவம் உதவ வேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேண்டு கோள் விடுத்திருந்தார்.அதைப் போக்கும் வகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் சப்ளை செய்ய முகேஷ் அம்பானி முன்வந்திருப்பது மிகவும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT