Published : 21 Nov 2015 10:44 AM
Last Updated : 21 Nov 2015 10:44 AM
பிரதமர் நரேந்திர மோடி, சீனப் பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்தார். 13-வது ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றுள்ளார்.
தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் மாநாட்டுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வந்துள்ளனர்.
இந்நிலையில் சீனப் பிரதமர் லீ கெகியாங்கை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதேபோல் 'சைனீஸ் கனெக்ட்' என்ற சீன நாட்டின் சமூக வலைதளத்திலும் மோடி - லீ கெகியாங் சந்திப்பு குறித்த தகவல் பகிரப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT