Published : 29 Nov 2015 12:51 PM
Last Updated : 29 Nov 2015 12:51 PM

ஓர் பாலினச் சேர்க்கை குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய அருண் ஜேட்லி கோரிக்கை

ஓர்பாலினச் சேர்க்கைக்கு எதிராக கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அருண் ஜேட்லி கோரிக்கை வைத்துள்ளார்.

இலக்கிய விழா ஒன்றில் பேசிய அருண் ஜேட்லி, தனது கட்சியான பாஜக மற்றும் சங்பரிவார் ஆகியவற்றுக்கு முரண்பாடான நிலைப்பாடு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓர் பாலினச் சேர்க்கையில் ஈடுபடும் மக்கள் பிரிவினரை நாம் புறந்தள்ளி விட முடியாது என்றும் இந்திய நீதிமன்றங்கள் கருத்துரிமை, செயலுரிமைக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாகவும், மேற்கு நாடுகளின் முற்போக்குச் சிந்தனைக்கு இணையான சிந்தனை கொண்டது இந்திய நீதிமன்றங்கள் என்றும் கூறிய அருண் ஜேட்லி, ஓர்பாலின சேர்க்கைக்கு எதிரான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதே விழாவில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது சல்மான் ருஷ்டியின் ‘சதானிக் வெர்சஸ்’ நாவலை தடை செய்திருக்கக் கூடாது என்றார்.

“சதானிக் வெர்சஸ் நூலை தடை செய்தது தவறு என்று கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x