Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

மார்ச் 26-ம் தேதி ‘பாரத் பந்த்’: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியிலும் கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்துக்கு பின்னர் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடங்கி வரும் 26-ம் தேதியுடன் 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன. இதனைக் குறிக்கும் விதமாக, அன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கங்கள் நேற்று அறிவித்தன. அத்துடன், வரும் 15-ம் தேதியன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வர்த்தக சங்கங்களும் டெல்லியில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x