Published : 24 Jun 2014 11:38 AM
Last Updated : 24 Jun 2014 11:38 AM
ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு, சட்டமன்றத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேர்தலுக்கு முன்னர், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்துவதாக வாக் குறுதி அளித்தார். அதன்படி, தான் முதல்வராக பதவியேற்ற அன்றே இதற்கான கோப்பில் கையெழுத் திட்டார். இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு, சட்டமன்றத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கப் பட்டது. இது உடனடியாக அம லுக்கு வருவதால், இந்த மாதம் ஓய்வு பெற இருந்தவர்கள் மேலும் இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து பணியாற்ற உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT