Published : 26 Feb 2021 12:12 PM
Last Updated : 26 Feb 2021 12:12 PM

கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு; நோயாளிகள் எண்ணிக்கையும் உயர்வு

கரோனா பாதிப்பு நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை இன்றும் உயர்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,10,63,491 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,07,50,680 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 12,179 குணமடைந்துள்னர்.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதேசமயம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால் கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,55,986 ஆக உள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 120 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,56,825 ஆக அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் மொத்தம் 1,34,72,643 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x