Published : 22 Feb 2021 03:16 AM
Last Updated : 22 Feb 2021 03:16 AM

பயிற்சிக்காக துப்பாக்கி எடுத்துச் செல்ல லஞ்சம்: ஏர் இந்தியா அதிகாரிகள் மீது வீராங்கனை மனுபாகர் புகார்

விமானத்தில் துப்பாக்கிகள், கொண்டு செல்ல தன்னிடம் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் புகார் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.

மனு பாகர் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி இந்திரா காந்திசர்வதேச விமான நிலையத்திலிருந்து போபாலுக்கு செல்லும் விமானத்தில் பயணிக்கவிருந்தார். விமானநிலையத்தில் அவர் தன்னுடன் பயிற்சிக்காக எடுத்து வந்த துப்பாக்கிகள், தோட்டாக்களுக்கு அனுமதி இல்லாததால் அதற்காக ரூ.10,200 செலுத்தவேண்டும் என்று ஏர் இந்தியா அதிகாரிகள் கூறினர். ஆனால் மனு பாகர் தான் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மனு பாகர் கூறும்போது, “துப்பாக்கி, தோட்டாக்கள் கொண்டு செல்ல நான் அனுமதி பெற்றுள்ளேன். ஆனால் அதிகாரிகள் துப்பாக்கி எடுத்துச் செல்ல லஞ்சம் கேட்டனர். என்னை கிரிமினல் போல நடத்தினர். அதிகாரிகள் செல்போனை பிடுங்கி புகைப்படங்களை அழித்தனர்’’ என்றார். இறுதியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் உத்தரவின் பேரில் அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “ஏர் இந்தியா அதிகாரிகள், மனு பாகரிடம் ஆவணங்களை மட்டுமே கேட்டனர். யாரும்லஞ்சம் கேட்கவில்லை. துப்பாக்கிகள் எடுத்துச் செல்லும்போது என்ன மாதிரியான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதைத்தான் அதிகாரிகள் செய்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x