Published : 25 Nov 2015 09:30 AM
Last Updated : 25 Nov 2015 09:30 AM

நக்ஸல் தளபதி என்கவுன்ட்டரில் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல் துறையி னருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் முக்கிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

மாவட்ட ரிசர்வ் படையினர் கேசபூர் கிராமத்தில், போடியா என்ற நக்ஸல் தளபதியைப் பிடிக்க முயன்றனர். அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தப்ப முயன்றார். பதிலுக்கு காவல் துறையினர் சுட்டதில், போடியா கொல்லப்பட்டார். இத்தகவலை தாந்தேவாடா காவல் துறை கண்காணிப்பாளர் கமலோச்சன் காஷ்யப் உறுதி செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x