Last Updated : 18 Oct, 2015 07:33 PM

 

Published : 18 Oct 2015 07:33 PM
Last Updated : 18 Oct 2015 07:33 PM

பிஹார் தேர்தல்: 8 இடங்களில் மோடி பிரச்சாரம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அங்கு இன்னும் 8 பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு நான்கு இடங்களிலும், நான்காம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பு நான்கு இடங்களிலும் மோடி பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என பாஜக மாநில தலைவர் மங்கள் பாண்டே தெரிவித்துள்ளார்.

சரண், வைஷாலி, நாளந்தா மாவட்டங்களில் வரும் 25-ம் தேதிதயும், பக்சாரில் வரும் 26-ம் தேதியும் மோடி பிரச்சாரம் செய்கிறார். மேலும், வரும் 27-ம் தேதி பெட்டா, மோதிஹரி, சித்தமர்ஹி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காம் கட்ட தேர்தல் வரும் நவம்பர் 1-ம் தேதி 55 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. மோடி ஏற்கெனவே 11 இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இதுவரை 81 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x