Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM
ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தமிழர்கள் திருவள்ளுவருக்கு நேற்று மரியாதை செலுத்தினர். சமூக வலைதளங்களில் திருக்குறளை பகிர்ந்தனர். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று ட்விட்டரில் திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டினார். திருக்குறளை இந்திய இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவரது இந்தப் பதிவு தமிழிலேயே வெளியிடப்பட்டது. ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
திருவள்ளுவர் தினத்தில் போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை தலைதாழ்த்தி வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. திருவள்ளுவரின் லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்தப் பதிவில் மோடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT