Published : 14 Oct 2015 08:18 AM
Last Updated : 14 Oct 2015 08:18 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தசரா விடுமுறை காரணமாக, கடந்த மாதம் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவைவிட இந்த விழாவுக்கு அதிக பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 6 லட்சம் லட்டு பிரசாதங் கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள தாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் நேற்று தெரிவித்தார்.
மேலும் பக்தர்களின் பாதுகாப் புக்காக 1,000 கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருமலைக்கு 2 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17-ம் தேதி இரவு 9 மணி முதல் 19-ம் தேதி காலை 10 மணி வரை திருமலைக்கு இருசக்கர வாகனங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.நேரடியாக வரும் விஐபி பக்தர் கள் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ் தானம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT