Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM
வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக பிளிப்கார்ட் மற்றும் ஸ்விக்கி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஆகியவற்றின் பெங்களூரு அலுவலகங்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் புதன், வியாழன் ஆகிய இரு நாட்களும் சோதனை நடத்தினர்.
இந்நிறுவனங்களின் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். இரு நிறுவனங்களும் வருமான வரித் துறையின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், வருமான வரி விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளன. சோதனை குறித்த தகவல்கள் எதுவும் வருமான வரித் துறை தரப்பில் வெளியிடப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT