Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செகந்திராபாத் மருத்துவமனையில் அனுமதி

ஹைதராபாத்

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு கடந்த சில மாதங்களாகவே நுரையீரலில் எரிச்சல் இருந்து வந்ததால் மருத்துவர்கள் அவருக்கு வீட்டிலேயே சிசிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் எரிச்சல் குறையவில்லை.

இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. எனினும் மேலும் சில பரிசோதனைகளை செய்வதற்காக நேற்று மதியம்2.30 மணியளவில் செகந்திராபாத் யசோதா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் ஆகியவைஎடுக்கப்பட்டது. ஒரு நாள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அவருடன் அவரது மகனும் அமைச்சருமான கே.டி. ராமா ராவ், மகள் கவிதா மற்றும் சிலர் உள்ளனர். ஆனால், பயப்படும்படி ஏதுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் பரவியதும், ஆளும் தெலங்கானா ராஷ்டிரசமிதி கட்சியின் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் மருத்துவமனை முன்பு குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x