Published : 15 Oct 2015 09:27 AM
Last Updated : 15 Oct 2015 09:27 AM
முற்போக்கு சிந்தனையாளர்கள் கொலை, கருத்துரிமை பாதிக்கப் படுவது, சிறுபான்மையினர் தாக்கப்படுவதைக் கண்டித்து பல்வேறு எழுத்தாளர்கள் தங்களின் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க கவிஞர் மாண்டக்ரந்தா சென் நேற்று முன்தினம் இளம் எழுத்தாளர்களுக்கான சிறப்பு சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பியுள்ளார்.
“தாத்ரி சம்பவம், எழுத்தாளர்கள் மீதான தாக்குதலுக்கு இவ்வகை யில் என் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன்” என சென் தெரி வித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு இளம் எழுத்தாளர்களுக்கான ஸ்வர்ண ஜெயந்தி சிறப்பு சாகித்ய அகாடமி விருது மாண்டக்ரந்தா சென்னுக்கு வழங்கப்பட்டது.
ஆனந்த புரஸ்கார், கிருத்தி வாஸ் புரஸ்கார் உள்ளிட்ட விருது களை வென்றுள்ள சென், 22 கவிதை நூல்கள், 7 நாவல்களை எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT