Published : 03 Jan 2021 03:21 AM
Last Updated : 03 Jan 2021 03:21 AM
எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க இந்தியப்படைகள் தயாராக உள்ளதாக முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
முப்படை தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, நேற்று முன்தினம் அருணாச்சலபிரதேச மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள சீன எல்லைப் பகுதியை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்புடன் இந்தியப் படைகள் உள்ளன. எல்லைப் பகுதியை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இங்கு எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க நமது படைகள் தயாராக உள்ளன. நமது வீரர்கள் மிகுந்த தீரத்துடன் இங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. எல்லைகளைப் பாதுகாப்பதில் ராணுவ வீரர்களின் பணி மெச்சத்தகுந்தது. எந்தவொரு சூழ்நிலையிலும் சிறப்பான கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது நமது ராணுவ வீரர்கள் மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT