Last Updated : 02 Jan, 2021 01:23 PM

 

Published : 02 Jan 2021 01:23 PM
Last Updated : 02 Jan 2021 01:23 PM

குஜராத்: லாரி மீது மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது: மூன்று பெண்கள் பலி

குஜராத்தில் இன்று அதிகாலை பருத்தி லாரி மீது கார் மோதி எரிந்ததில் 3 பெண்கள் பலியான கோர விபத்து

ராஜ்கோட்

குஜராத் மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பருத்தி மூட்டைகளை ஏற்றிவந்த லாரி மீது மோதிய கார் தீப்பிடித்து எரிந்ததால் மூன்று பெண்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் கோண்டலில் சனிக்கிழமை காலை இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

இன்று காலை 6 மணியளவில் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த பிலியாலா கிராமத்திற்கு அருகிலுள்ள கோண்டல்-ராஜ்கோட் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மூன்று பெண் பயணிகளை ஏற்றிச் சென்ற கார் மற்றும் பருத்தி பேல்களை ஏற்றிச் சென்ற லாரி மோதியது. மோதிய பின்னர் இரு வாகனங்களும் தீப்பிடித்தன. மூன்று பயணிகளும் சரியான நேரத்தில் காரில் இருந்து வெளியேற முடியவில்லை, மேலும் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் காரின் ஓட்டுநருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்கள் ரேகா ஜடேஜா (62), ராசிக் ரைஜாடா (80), முகுந்த்பா ரைஜாடா (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x