Last Updated : 16 Dec, 2020 04:38 PM

 

Published : 16 Dec 2020 04:38 PM
Last Updated : 16 Dec 2020 04:38 PM

சிலிண்டர் விலை உயர்வு; மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாத அரசு: ராஜஸ்தான் முதல்வர் தாக்கு

மத்திய அரசு மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல் உணர்ச்சியற்ற நிலையில் இருப்பதையே சிலிண்டர் விலை உயர்வு காட்டுகிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதத்தில் தொடர்ந்து 2-வது முறை உயர்த்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு முன்பு டிசம்பர் 1-ம் தேதி, சிலிண்டருக்கு ரூ.50 விலை உயர்த்தப்பட்டது. இதனால் ரூ.610 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.660 ஆக அதிகரித்தது. இப்போது மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.710 ஆக சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பதிவில் இன்று கூறியுள்ளதாவது:

"உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வது மக்களின் நிதித் துயரங்களை மேலும் மேலும் அதிகரிக்கும்.

15 நாட்களில் ரூ.100 உயர்த்துவது மிக அதிகம். மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல் அரசாங்கம் எவ்வாறு உணர்ச்சியற்ற நிலையில் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

பாஜக அரசாங்கத்தின் கீழ், பொருளாதார மந்தநிலை மற்றும் கரோனா வைரஸ் நெருக்கடியின்போது கூட மக்களுக்கு எந்தவித நிவாரணமும் இல்லை''.

இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x