Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM
புதுடெல்லி: செல்போன் சேவையில் ஈடுபட்டு வந்த ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஒப்புதல் வழங்கப்பட்டபோது மத்திய நிதியமைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் தர வேண்டும் என சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை தாமதமாகி வருவதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி அஜய் குமார் குஹார், விசாரணையை முடிக்க மேலும் 2 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT