Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

காங். தலைமையை மாற்றக்கோரி மீண்டும் கடிதமா?

காங்கிரஸுக்கு முழு நேரத் தலைவரை நியமிக்க வேண்டும் என்று கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு,கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 பேர் கடந்தஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினர்.இவர்களை ஜி-23 தலைவர்கள் என்றும் அழைத்து வந்தனர்.

எனினும், கட்சி தலைவரை மாற்றவேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் பிஹார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி கண்டது.

இதையடுத்து கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என்றுஅதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் ஒரு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஆனால்இதை குலாம் நபி ஆசாத் மறுத்துள்ளார்.

இதுகுறித்து குலாம் நபிஆசாத் கூறும்போது, “அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கூடி தலைமையை மாற்றுவதற்காக ஆலோசனை நடத்தவில்லை. அதேபோல் எந்தவிதமான கடிதத்தையும் கட்சித் தலைமைக்கு அனுப்ப வில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x