Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM
கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயரை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பவ்நகர் மாவட்டத்தில் உள்ள கோகா மற்றும் சூரத்தில் உள்ள ஹசீரா ஆகியவற்றுக்கு இடையே ரோ-பேக்ஸ் படகு போக்குவரத்து சேவையைத் தொடங்கி வைத்த போது இதனை பிரதமர் மோடி தெரிவித்தார்.
அப்போது மோடி கூறியதாவது:
சுயசார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு நாட்டின் நீர்வழிப் போக்குவரத்தில் பெரிய முயற்சியாக இது உள்ளது. நீர்வழிப் போக்குவரத்தைத் திறம்பட பயன்படுத்துவதற்காகவும் சர்வதேச தரத்திலான இலக்கை எட்டுவதற்காகவும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயர் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
வளர்ந்த பொருளதாரம் கொண்ட நாடுகளில் பெரும்பாலும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ்தான், கப்பல், துறைமுகங்கள், தேசிய மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆகிய அனைத்தும் உள்ளன. இந்த செயல்முறையை இந்தியாவிலும் செயல்படுத்துவதன் மூலம் இந்தியப் போக்குவரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரலாம். இந்த முயற்சி விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு மோடி கூறினார்.
தற்போது கோகா மற்றும் ஹசீரா ஆகிய 2 நகரங்களுக்கும் இடையிலான தூரம் சாலை வழியாக 370 கி.மீட்டராக உள்ளது. ரோ-பேக்ஸ் படகு போக்குவரத்து மூலம் இந்த தூரம் கடல் வழியாக 90 கி.மீட்டராகக் குறையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT