Published : 17 Oct 2015 07:58 AM
Last Updated : 17 Oct 2015 07:58 AM

தெலங்கானாவில் ஏரியில் மூழ்கி 4 பேர் பலி

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் ஏரியில் குளிக்கச் சென்ற 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள சிக்கட பல்லி, ராமாந்தபூர் பகுதிகளை சேர்ந்த போச்சய்யா (42), பிரவீன் (17), நரசிம்முலு (40), மது (14) ஆகிய 4 பேரும் உறவினர்கள். இவர்கள் அனைவரும் தசரா விடுமுறைக்காக அவர்களது சொந்த ஊரான வாரங்கல் மாவட்டம், காகில்லபூருக்கு சென்றனர்.

நேற்று காலை இவர்கள் இந்த ஊரில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர். அப்போது இதில் இருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களை காப்பாற்ற முயன்ற மற்ற இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில், 4 பேரும் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x