Published : 08 Oct 2015 07:40 AM
Last Updated : 08 Oct 2015 07:40 AM
தமிழகத்தில் தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் தெலுங்கு மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். எனவே, தெலுங்கு மொழியை 2-வது மொழியாக பயில வாய்ப்பு அளிக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT